shadow

அன்று பிரியாணி கடை, இன்று செல்போன் கடையா?

திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடியில் உள்ள கடையொன்றில் செல்போன் பழுதை சரி செய்ய சென்ற தி.மு.க.வினர் 2 பேர், கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த செல்போன் கடையின் உரிமையாளர் மணிவண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில், தி.மு.க.இளைஞர் அணி அமைப்பாளர் ரகுபதி மாசிலாமணி மற்றும் கணேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

செல்போனை பழுது நீக்கி தர முடியாது என மணிவண்ணன் கூறியதால் ஆத்திரமடைந்த 2 பேரும் அவரையும், கடை ஊழியர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் பிரியாணி இல்லை என்று சொன்னதால் பிரியாணி கடை ஊழியர்கள் திமுகவினர்களால் தாக்கப்பட்டனர் என்பதும் இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வருத்தம் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply