shadow

அன்புமணியை தடுப்பது ஏன்? தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை – சேலம் பசுமைவழி சாலைக்கு எதிராக கடந்த சில நாட்களாக அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ், அந்த பகுதி மக்களிடம் இந்த சாலை குறித்த கருத்துக்கணிப்பை சமீபத்தில் எடுத்தார். ஆனால் அதற்கு தமிழக அரசு தடை செய்துள்ளது.

இந்த நிலையில் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்க விடாமல் பாமக எம்.பி. அன்புமணி ராமதாசை தடுப்பது ஏன் என, தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. அன்புமணி ராமதாஸூக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பாமக துணை பொது செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாயிகளை சந்திக்க விடாமல் அன்புமணி ராமதாஸை அரசு தடுப்பது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் இந்த மனுவுக்கு ஜூலை 6 ம் தேதிக்குள் பதிலளிக்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply