shadow

அதிமுகவினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: தமிழிசை செளந்திரராஜன் அறிவுரை

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைவதால் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சி வேட்பாளருக்கு நிகராக டிடிவி தினகரனும் வெற்றி பெறும் வேட்பாளர்களின் பட்டியலில் உள்ளார்.

இந்த நிலையில் தினகரனுக்கு மறைமுக ஆதரவை திமுக தருவதாகவும், எனவே அதிமுக ட்சித்தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.’

மேலும் இரு மாநிலங்களின் வெற்றி குறித்து ப.சிதம்பரம் கூறிய கருத்துக்கு பதிலடி தரும் வகையில் கூறிய தமிழிசை, ‘தேர்தலில் தவழக்கூட முடியாதவர்கள் தட்டுத்தடுமாறி ஜெய்த்தோம் என பாஜகவை விமர்சிப்பதா? என்றும் ஊழல் ஒழிக்கப்படுவதாலேயே பாஜகவுக்கு மக்கள் வாக்கு அளிக்கிறார்கள்’ என்றும் கூறியிருந்தார்.

முன்னதாக ப.சிதம்பரம் தனது டுவிட்டரில், ‘குஜராத் தேர்தலில் பாஜக தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றுள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply