அதிர்ச்சி தகவல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக விலை சொன்ன பழ வியாபாரியை செக்யூரிட்டி ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா என்ற பகுதியில் பழ வியாபாரி ஒருவரிடம் செக்யூரிட்டி ஒருவர் பழங்கள் வாங்க பேரம் பேசினார். பழ வியாபாரி அதிக விலை கூறியதால் இருவருக்கும் இடையே வார்த்தைகள் முற்றிய சண்டை வலுத்தது

இதில் ஆத்திரமான செக்யூரிட்டி உடனே தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து பழ வியாபாரியை சுட்டார். பழ வியாபாரி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கியால் சுட்ட செக்யூரிட்டியை கைது செய்து அவருடைய லைசென்சை ரத்து செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply