அண்ணா பல்கலை. தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு: புதிய தேதிகள் குறித்த அறிவிப்பு
தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் நடக்க இருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டி, வரும் 23-ம் தேதி முதல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளை சனி மற்றும் ஞாயிறு என்பதால், நாளை முதலே கல்லூரிகளுக்கு விடுமுறை கிடைக்கும். இதற்கேற்ப, சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி ஈடு செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளை முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் விடுமுறை விடப்பட்டதையொட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த இளநிலை, முதுகலை தேர்வுகள் அனைத்தும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.