shadow

அண்ணா அறிவாலயம் வருகிறார் சோனியா காந்தி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் நவம்பர் 15ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம் வருகை தந்து கலைஞரின் சிலையை திறந்து வைக்கின்றார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க திமுக ஏற்கனவே முடிவு செய்திருந்த நிலையில் தற்போது நவம்பர் 15ஆம் தேதி சிலை திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிலையை திறந்து வைக்க சோனியா காந்தியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் முறையான அழைப்பு விடுத்ததை அடுத்து இந்த சிலை திறப்பு விழாவிற்கு வருகை தர சோனியா காந்தி ஒப்புக்கொண்டுள்ளார். நவம்பர் 15ஆம் தேதி சோனியா காந்தியுடன் ராகுல் காந்தியும் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply