அமைச்சர் செங்கோட்டையன்

“தமிழகத்தில் ஆன்-லைன் வழி கல்வி இல்லை என்றும், டிவி மூலம் மட்டுமே பாடம் கற்பிக்க திட்டம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சற்றுமுன் கூறியுள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 13ஆம் தேதிக்கு இன்னர் ஆன்-லைன் வழி கல்வி கற்பிக்கப்படும் என நேற்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது டிவி மூலம் மட்டுமே பாடம் கற்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை பல அறிவிப்புகளை அறிவித்துவிட்டு அதன்பின் மறுநாளே அதை மாற்றியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு அறிவிப்பு மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply