அடுத்த சுற்றுப்பயணம் இஸ்ரேல்: சென்னை திரும்பிய முதல்வர் பேட்டி!

கடந்த சில நாட்களாக அரசுமுறை வெளிநாட்டு சுற்றுப்பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அவரை அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்த சுற்றுப்பயணம் வெற்றிகரமாக முடிந்ததாகவும் வெளிநாட்டு தொழிலதிபர்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் இதனால் தமிழகத்திற்கு அதிகளவில் முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும் அடுத்ததாக நீர் மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்வதற்காக இஸ்ரேல் நாட்டிற்கு விரைவில் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி பேட்டியில் தெரிவித்தார். எனவே முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் அடுத்தடுத்து தொடரும் என தெரிகிறது

Leave a Reply