அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் சுசீந்திரனின் நோக்கம் என்ன?

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கே தெரியாது. ஆனால் அஜித் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்பது உலகறிந்தது. இந்த நிலையில் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்றும், அவர் ஒருவரால் மட்டுமே இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்றும் சுசீந்திரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சுசீந்திரன் கூறியதாவது: 40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறே. இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு. உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்’ என்று சுசீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அஜித் அரசியலுக்கு வரமாட்டார் என்று தெரிந்தும் தன்னுடைய ‘கென்னடி கிளப்’ படத்தின் விளம்பரத்திற்காக சுசீந்திரன் இம்மாதிரி மலிவான கருத்துக்களை தெரிவித்து வருவதாக சமூக வலைத்தள பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply