shadow

அஜய் ஞானமுத்துவின் அடுத்த படத்தில் விக்ரம்-நயன்தாரா

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய 2 வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அஜய்ஞானமுத்து அடுத்ததாக மீண்டும் ஒரு த்ரில் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தில் விக்ரம், நயன்தாரா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏறகன்வே இருவரும் ‘இருமுகன்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பதும் அஜய் ஞானமுத்துவின் முந்தைய படமான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாரா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தை ‘அசுரவதம்’ படத்தை தயாரித்த லீலா லலித்குமார் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைல் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு பல கெட்டப்புகள் இருக்கும் என்றும் அதனால் இதுவரை காணாத விக்ரமை இந்த படத்தில் அவருடைய ரசிகர்கள் காண்பார்கள் என்றும் அஜய்ஞானமுத்து தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply