அக்டோபர் 1ஆம் தேதி போராட்டம்: திமுகவுக்கு கிடைத்த அடுத்த காரணம்

அண்ணா பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் இருந்து பகவத் கீதையை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் 1ம் தேதி திமுக போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் இருந்து பகவத் கீதை இணைக்கப்பட்ட நிலையில் அதன்பின்னர் அப்பல்கலைகழகத்தின் துணைவேந்தர் சூரப்பா அவர்கள், ‘’கட்டாயப் பாடமாக இருக்கும் பகவத் கீதை உள்ளிட்ட தத்துவவியல் பாடம் விருப்ப பாடமாக மாற்றப்படும் என்றும் விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் அந்த பாடத்தைத் தேர்வு செய்து படிக்கலாம் என்றும் விருப்பம் இல்லாதவர்கள் பட்டியலில் உள்ள மொத்த 12 பாடங்களில் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு பாடத்தைத் தேர்வு செய்து படித்துக் கொள்ளலாம் என கூறியிருந்தார்

இந்த விளக்கத்தை அடுத்தும் திமுக போராட்டம் என அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்தால் அப்பாவி பொதுமக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்பது கசப்பான உண்மை

Leave a Reply