ஃபேஸ்புக் காதலால் கர்ப்பம் அடைந்த ஆசிரியை! தூக்கு போட்டுக்கொண்ட காதலன்

பேஸ்புக் மூலம் காதலித்த பெண் ஒருவர் திடீரென கர்ப்பமானார். அவரது கர்ப்பத்திற்கு காரணமான காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலம் என்ற பகுதியை சேர்ந்த 31 வயது ஆசிரியை ஒருவர் பேஸ்புக் மூலம் விஜய்சங்கர் என்பவரை காதலித்தார்

இருவரும் சில மாதங்கள் பார்க்காமலே காதலித்து அதன் பின் ஒரு கட்டத்தில் நேரில் சந்தித்துக் கொண்டனர் இதனை அடுத்து அந்த பெண் கர்ப்பம் அடைந்தார்

இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது

ஒரு கட்டத்தில் கர்ப்பமான காதலியால் தனக்கு பிரச்சனை வரும் என்று முடிவு செய்த விஜய்சங்கர், காதலியை கொலை செய்ய முடிவு செய்து அவரை கத்தியால் குத்தியுள்ளார்.

அவரிடமிருந்து வெட்டு காயத்துடன் தப்பி ஓடிய அந்த பெண் வீட்டை வெளியில் பூட்டிவிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் துணையுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வீட்டின் கதவை தட்டி விஜய் ஷங்கரை வெளியே வருமாறு கூறினர். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வராததால் கதவை உடைத்து பார்த்தபோது விஜய்சந்தர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருந்தார்

பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதலால் காதலி கர்ப்பமாகியும், காதலன் பிணமாக தொங்கிய காட்சி அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது

Leave a Reply